ஆந்திராவில் கடந்த வருடம் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி பதவியில் அமர்ந்த நாளிலிருந்து புது புது திட்டங்களை கொண்டுவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. அதில் மார்ச் 2-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த முடிவு செய்ததாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், இதுகுறித்த தகவல் தேர்தலுக்கு பிறகு தெரிந்தால், அவர்களது பதவி பறிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…