Yediyurappa [file image]
கர்நாடகா : எடியூரப்பாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், நேற்றைய தினம் பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமினில் வர முடியாத வகையில், கைது வாரண்டை பிறப்பித்தது பெங்களூர் குற்றவியல் நீதிமன்றம்.
இந்த நிலையில், கைது வாரண்டை தடை செய்ய வேண்டும் என்றும், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் எடியூரப்பா. அந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்டுள்ள போக்சோ வழக்கில், எடியூரப்பாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த விசாரணை தேதி வரை, கைது நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 17ம் தேதி எடியூரப்பா காவல்துறையின் முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்ய கூடாது என்று எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனுவில் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 12 ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு அழைத்தது. ஆனால், அவர் தான் டெல்லியில் இருப்பதைக் காரணம் காட்டி ஜூன் 18 ஆம் தேதி வரை கால அவகாசம் கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…