274 பேருடன் மும்பை அருகே நடுக்கடலில் மூழ்கிய கப்பல் – இதுவரை 51 பேரின் உடல்கள் மீட்பு!

Published by
Rebekal

மும்பை அருகேயுள்ள நடுக்கடலில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 86 பேர் மாயமாகி உள்ளனர். இதுவரை 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறு அருகே என்னை துரக்கும் பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த b-305 எனும் கப்பல் அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த திங்கள் கிழமை இரவு கரையை கடக்கும் பொழுது கப்பல் நங்கூரத்தை இழந்துள்ளது. அதே நேரம் கடல் கொந்தளிப்பும் அதிகமாக இருந்ததால் இந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. இதனையடுத்து இந்த கப்பலில் இருந்து 274 பேர் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், 188 பேர் மீட்கப்பட்டனர்.

மேலும் 86 பேரை மீட்கும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 49 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளார். மாயமாகிய 86 பேரில் இதுவரை 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 35 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

எண்ணெய் துரக்கும் பணிக்காக அனுப்பப்பட்டிருந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 35 லட்சம் முதல் 75 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என ஓஎன்ஜிசி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அக்கப்பலின் கேப்டன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

Published by
Rebekal

Recent Posts

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

42 minutes ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

2 hours ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

2 hours ago

“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…

2 hours ago

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

3 hours ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

3 hours ago