274 பேருடன் மும்பை அருகே நடுக்கடலில் மூழ்கிய கப்பல் – இதுவரை 51 பேரின் உடல்கள் மீட்பு!

Published by
Rebekal

மும்பை அருகேயுள்ள நடுக்கடலில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 86 பேர் மாயமாகி உள்ளனர். இதுவரை 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறு அருகே என்னை துரக்கும் பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த b-305 எனும் கப்பல் அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த திங்கள் கிழமை இரவு கரையை கடக்கும் பொழுது கப்பல் நங்கூரத்தை இழந்துள்ளது. அதே நேரம் கடல் கொந்தளிப்பும் அதிகமாக இருந்ததால் இந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. இதனையடுத்து இந்த கப்பலில் இருந்து 274 பேர் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், 188 பேர் மீட்கப்பட்டனர்.

மேலும் 86 பேரை மீட்கும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 49 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளார். மாயமாகிய 86 பேரில் இதுவரை 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 35 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

எண்ணெய் துரக்கும் பணிக்காக அனுப்பப்பட்டிருந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 35 லட்சம் முதல் 75 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என ஓஎன்ஜிசி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அக்கப்பலின் கேப்டன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

Published by
Rebekal

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

10 minutes ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

56 minutes ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

2 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

2 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

2 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

4 hours ago