உ.பி-யில் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவனை காலை நக்க வைத்த உயர் ஜாதி இளைஞன்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடிக்கடி தலித் மக்களுக்கு மத்தியில் பல்வேறு கொடுமைகள் நேரிட்டு வருகிறது. அந்த வகையில் ரேபரேலியில் ஜாதி அடிப்படையிலான வன்முறை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனை, உயர் ஜாதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் தனது கால்களை நக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் தரையில் அமர்ந்து, பைக்கில் அமர்ந்திருக்கும் ஒரு இளைஞனின் காலை நக்குகிறார். சுற்றி உள்ள பலர் பாதிக்கப்பட்ட சிறுவன் பயந்து நடுங்குவதை கண்டு ஏளனமாக சிரிக்கின்றனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் உயர் சாதியினர் என்று கூறப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் 10-ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், தகப்பன் இல்லாத சூழலில் விதவை தாயுடன் வசித்து வருகிறார். அந்த சிறுவனின் தாய் குற்றம்சாட்டப்பட்ட சிலரின் வயலில் வேலை செய்வதாக கூறப்டுகிறது.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…