உ.பியில் அதிர்ச்சி…கண்முன்னே தீக்குளித்த சகோதரி…! காப்பாற்றாமல் வீடியோ எடுத்த சகோதரன்.!

Published by
செந்தில்குமார்

உத்தரபிரதேசத்தில் பெண் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 31 வயது பெண் ஒருவர், அக்கம்பக்கத்தினருடன் ஏற்பட்ட தகராறில் தனது பெற்றோரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால், பெண்ணின் சகோதரர் தீக்குளிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் ரெட்டி காலனியில் சுந்தர்லால், ஊர்மிளா தம்பதிகள் மகள் சரோஜ் உட்பட மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சுந்தர்லால் நகரில் பகுதி நேர வேலை செய்கிறார். இவர்கள் வீட்டிற்கு அருகில் பவன் குப்தா என்பவர் வசித்து வருகிறார்.

நேற்று ஊர்மிளா, பவன் குப்தாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, குப்தா காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன்பின், அங்கு வந்த போலீசார் ஊர்மிளா மற்றும் அவரது கணவர் சுந்தர்லால் இருவரையும் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, ஊர்மிளாவின் மகள் சரோஜ் பெட்ரோல் ஊற்றி தன்னைத்தானே தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவருக்கு அருகில் இருந்த சரோஜின் சகோதரர் சஞ்சீவ், காப்பாற்றுவதற்குப் பதிலாக வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஊர்மிளா, தனது மகள் மனஉளைச்சலால் தற்கொலை செய்ய முயன்றுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், அருகில் உள்ளவர்கள் சரோஜ் தனது சகோதரரின் வற்புறுத்தலால் இதனை செய்துள்ளதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து, ஷாஜஹான்பூர் மூத்த போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஆனந்த் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் இடுப்பு வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

9 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

51 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

1 hour ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

4 hours ago