Categories: இந்தியா

சிக்கிமில் திடீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு…100 பேர் மாயம்!

Published by
கெளதம்

சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.

சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் கடந்த 4 ஆம் தேதி அதிகாலையில் திடீர் மேகவெடிப்பு காரணமாக பலத்த கனமழை பெய்தது. இதனால், தீஸ்தா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பல சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் சிக்கித் தவிக்கும் நிலையில், பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, சிக்கிமின் பல்வேறு பகுதிகளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், மேற்கு வங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மற்றும் கூச் பெஹார் மாவட்டங்களில் 49 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போய்யுள்ளனர். இதற்கிடையில், இந்த வெள்ளத்தில் காணாமல் போன இந்திய ராணுவ வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காணாமல் போன 23 பேரில் இதுவரை ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார், மேலும் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், வடக்கு சிக்கிமில் உள்ள லாச்சென், லாச்சுங், தாங்கு மற்றும் சுங்தாங் ஆகிய இடங்களில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 1,700 சுற்றுலாப் பயணிகளுக்கு ராணுவ வீரர்கள் உணவு, மருத்துவ உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

Published by
கெளதம்

Recent Posts

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!

சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (வயது 76) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள…

20 minutes ago

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை – குற்றவாளி புகைப்படம் வெளியீடு.., தேடும் பணி தீவிரம்.!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த சனிக்கிழமை (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி…

34 minutes ago

திருச்செந்தூர் அருகே இரண்டு பள்ளி வாகனங்கள் மோதி 3 மாணவர்கள் காயம்.!

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியில் நேற்று (ஜூலை 18) மாலை இரண்டு பள்ளி வாகனங்கள் நேருக்கு…

1 hour ago

”அன்பு அண்ணனை இழந்து விட்டேன்.., துயரம் என்னை வதைக்கிறது” – மனம் உருகிய முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, வயது மூப்பின் காரணமாக சென்னையில்…

1 hour ago

இஸ்ரேல் – சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.!

அங்காரா: இஸ்ரேல் - சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் அறிவித்துள்ளார்.…

2 hours ago

கலைஞரின் மூத்த மகனான மு.க.முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்.!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77),…

3 hours ago