Categories: இந்தியா

சிக்கிமில் திடீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு…100 பேர் மாயம்!

Published by
கெளதம்

சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.

சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் கடந்த 4 ஆம் தேதி அதிகாலையில் திடீர் மேகவெடிப்பு காரணமாக பலத்த கனமழை பெய்தது. இதனால், தீஸ்தா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பல சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் சிக்கித் தவிக்கும் நிலையில், பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, சிக்கிமின் பல்வேறு பகுதிகளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், மேற்கு வங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மற்றும் கூச் பெஹார் மாவட்டங்களில் 49 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போய்யுள்ளனர். இதற்கிடையில், இந்த வெள்ளத்தில் காணாமல் போன இந்திய ராணுவ வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காணாமல் போன 23 பேரில் இதுவரை ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார், மேலும் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், வடக்கு சிக்கிமில் உள்ள லாச்சென், லாச்சுங், தாங்கு மற்றும் சுங்தாங் ஆகிய இடங்களில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 1,700 சுற்றுலாப் பயணிகளுக்கு ராணுவ வீரர்கள் உணவு, மருத்துவ உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

Published by
கெளதம்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 hour ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

3 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

8 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

10 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago