ஹைபோவாலின் என்ற ஒரு வயது குழந்தைக்கு கூடுதலாக இருந்த மூன்றாவது காலை நீக்கிய மருத்துவர்கள்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஹைபோவாலின் என்ற ஒரு வயது குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அக்குழந்தைக்கு சாதாரணமாக உள்ள இரண்டு கால்களை தவிர்த்து, மேலும் ஒரு கூடுதல் கால் பின்புறத்தில் இருந்துள்ளது. இது முக்காலி சிதைவு என்று கூறப்படுகிறது.
இந்த கால் நரம்பியல் ரீதியாக அப்படியே இருந்தாலும், காலில் சக்தி குறைவாக தான் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து இக்குழந்தைக்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழு, 6 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்த காலை பிரித்து எடுத்துள்ளனர். குழந்தையின் குடும்பத்தார் குறைந்த வருமானம் கொண்டவர்கள். எனவே, இக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று உதவிசெய்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு சுமார் 1.25 லட்சம் செலவாகி உள்ளது.
இந்த அறுவை சிகிச்சையை, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.கே.கெளசல், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது யமின், குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.ஜே.சிங் மற்றும் மூத்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் ரவீந்திரா ஆகியோர் மேற்கொண்டனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…