Categories: இந்தியா

ஒடிசா ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 233ஆக உயர்வு.!

Published by
மணிகண்டன்

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவரா நகருக்கு சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலானது ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்திலுள்ள பாஹாநகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, அருகில் உள்ள தண்டவாளத்தில் கவிழ்ந்தது. அந்த சமயம் எதிரே மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலானது தடம்புரண்டு கிடந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலானது ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதி எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதி 3 ரயில்களும் பெரும் விபத்துக்குள் சிக்கன.

சில நிமிட இடைவெளியில் நடந்த இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்து விட்டனர். அவர் ரத்தக்காயங்களுடன் பலத்த காயமடைந்து உள்ளனர். இன்னும் பலர் உள்ளே சிக்கி இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்த தகவல் வரை இந்த கோர விபத்தில் 233 பேர் உயிரிழந்ததாகவும், 900-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்திலிருந்து மீட்புப்பணிக்காக வீரர்கள் சென்று உள்ளனர். மத்திய அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

8 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

8 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

10 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

12 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 hours ago