Categories: இந்தியா

ஒடிசா ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 233ஆக உயர்வு.!

Published by
மணிகண்டன்

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவரா நகருக்கு சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலானது ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்திலுள்ள பாஹாநகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, அருகில் உள்ள தண்டவாளத்தில் கவிழ்ந்தது. அந்த சமயம் எதிரே மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலானது தடம்புரண்டு கிடந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலானது ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதி எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதி 3 ரயில்களும் பெரும் விபத்துக்குள் சிக்கன.

சில நிமிட இடைவெளியில் நடந்த இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்து விட்டனர். அவர் ரத்தக்காயங்களுடன் பலத்த காயமடைந்து உள்ளனர். இன்னும் பலர் உள்ளே சிக்கி இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்த தகவல் வரை இந்த கோர விபத்தில் 233 பேர் உயிரிழந்ததாகவும், 900-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்திலிருந்து மீட்புப்பணிக்காக வீரர்கள் சென்று உள்ளனர். மத்திய அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

6 minutes ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

1 hour ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

2 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

5 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

6 hours ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

6 hours ago