Categories: இந்தியா

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்! பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் இந்திய பிரதமர் பேச்சு!

Published by
பாலா கலியமூர்த்தி

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கண்டிக்க எஸ்சிஓ தயங்கக்கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் பிரதமர் மோடி பேச்சு.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 23வது மாநாடு இந்தியா சார்பில் பிரதமர் மோடி தலைமையேற்று காணொளி வாயிலாக நடத்தினார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பாதுகாப்பு, பொருளாதாரம், உணவு பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், ஆப்கானிஸ்தானின் நிலைமை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது, இந்த மாநாட்டில் காணொளி முலமாக உரையாற்றிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகளுக்கு சில நாடுகள் அடைக்கலம் கொடுத்து வருவதாக பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி உரையில், பயங்கரவாதம் பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதற்கு எதிராக நாம் போராட வேண்டும். சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தங்கள் கொள்கைகளின் கருவியாகப் பயன்படுத்துகின்றன மற்றும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. SCO அமைப்பு அத்தகைய நாடுகளை விமர்சிக்க தயங்கக்கூடாது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கண்டிக்க எஸ்சிஓ தயங்கக்கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் செரிப்பிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது எனவும் கூறினார். மேலும், பிரதமர் கூறுகையில், நாங்கள் எஸ்சிஓவை குடும்பமாக பார்க்கிறோம். பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, இணைப்பு, ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை எங்கள் பார்வையின் தூண்கள். அமைதி, செழிப்பு, யூரேசியாவின் வளர்ச்சிக்கான முக்கிய தளமாக எஸ்சிஓ உருவெடுத்துள்ளது என்றார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

5 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

5 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

7 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

7 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

10 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

10 hours ago