Sonia Gandhi - PM Modi [File Image]
வரும் செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரையில் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கூட்டத்தின் நோக்கம் பற்றி இன்னும் வெளிப்படையான தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், இந்த சிறப்பு கூட்டத்தில் கேள்வி நேரம் இல்லை.
இது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. மேலும், நேற்று காங்கிரஸ் தலைமையில், இந்தியா எதிர்கட்சி கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தினை பற்றிய சாராம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கருத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், செப்டம்பர் 18, 2023 முதல் நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளீர்கள்.
மற்ற அரசியல் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பற்றி யாருக்கும் தெரியாது. எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதெல்லாம், ஐந்து நாட்களும் அரசாங்க அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே.
நாங்கள் சிறப்பு அமர்வில் பங்கேற்க விரும்புகிறோம். ஏனெனில் சில முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எங்களுக்கு வாய்ப்பளிக்கும். பல்வேறு பிரச்சினைகள் பற்றிய விவாதம் மற்றும் அந்த விவாதத்திற்கான நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
போன்ற ஆக்கபூர்வமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…