உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாள்தோறும் வெளியில் சென்று வேலை செய்த ஆண்களுக்கும் சரி, வெளியில் இருந்துகொண்டு மருத்துவர்களாகவும் காவல்துறை அதிகாரிகளாகவும் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சரி மன உளைச்சல் என்பது தற்போது அதிக அளவில் ஏற்படுகிறது.
எனவே புதுக்கோட்டையில் இதற்கான ஒரு சிறந்த செயல்பாடு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அதாவது மன அழுத்தம் ஏற்படுபவர்களுக்கு தொலைபேசி வழியாக நல்ல மன நல ஆலோசனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த இரு 94860 67686, 94941 21297 எண்களில் தேவைக்கேற்ப ஆலோசகர்கள் ஆலோசனை கூறுவார்கள். தமிழக அரசின் அனுமதியோடு மார்ச் 26ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை தடுப்புப் நடவடிக்கையில் உள்ளவர்கள் என அனைவருக்குமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும், இது குறித்து கூறும் அந்த திட்டத்தின் அலுவலர் ரெ.கார்த்திக் தெய்வநாயகம் அவர்கள் கஜா புயலில் சிக்கியவர்களுக்கு கொடுக்கப்பட்ட மனநல ஆலோசனை நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, இந்த திட்டமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டம் முதலில் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…