Categories: இந்தியா

NEET: நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை!

Published by
கெளதம்

ராஜஸ்தானின் கோட்டாவில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) தயாராகிக்கொண்டிருந்த 16 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ராஜஸ்தானில் உள்ள பயிற்சி மையமான கோட்டாவில் இந்த ஆண்டு எட்டு மாதங்களில் மட்டும் 25 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

கோட்டா நகரில் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 16 வயது மாணவி ரிச்சா சிங் என்பவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

JEE மற்றும் NEET போன்ற கூட்டு நுழைவுத் தேர்வுகளுக்குத் தகுதிபெறும் நம்பிக்கையில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் கோட்டாவுக்கு வருகிறார்கள். இந்த ஆண்டு, அந்த மாவட்டத்தில் தேர்வுகளின் அழுத்தத்தால் 25 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது எந்த ஆண்டும் இல்லாத அதிமான எண்ணிக்கையாகும்.

இதற்கிடையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், மாநிலத்தின் பயிற்சி நிறுவனங்களில், குறிப்பாக கோட்டாவில் உள்ள மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க பரிந்துரைகளைக் கேட்டது. குழந்தைகளின் உளவியல் ஆலோசனையில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

Published by
கெளதம்

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

7 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

8 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

9 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

9 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

10 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

10 hours ago