Manipur Chief Minister [File Image]
மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங்குக்கு சொந்தமான வீட்டை, முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டி அடித்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக பல மாதங்களாக கலவர சூழல் நிலவும் நிலையில், சில நாட்களுக்குமுன் அங்கு மைதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் இரு மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது, இந்த மாண்வர்களின் மரணத்தைக் கண்டித்து, சக மாணவர்கள் நடத்திய போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இன்றும் ஓயாமல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்பாலின் கிழக்குப் பகுதியான ஹெய்கங்கில், அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங்கிற்கு சொந்தமான வீட்டை நோக்கி ஏராளமானோர் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, பொதுமக்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது, போலீசார் தடுத்த நிலையில், அங்கு பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது. முதலமைச்சரின் வீடு மீது தாக்குதல் நடத்த முயற்சியின் போது, வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி துரத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் மணிப்பூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மண்டல அலுவலகத்திற்கு தீ வைத்தனர். அதே நாளில், மணிப்பூரின் பல மாணவர் அமைப்புகள் மணிப்பூரில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…