மின் கசிவு காரணமாக இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலுக்கு அருகில் கிட்டத்தட்ட 150 கடைகள் வரை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே இருக்கக்கூடிய ஆஸ்தான மண்டபத்தில் கடைகளுக்கு அருகே செல்லக் கூடிய மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே, திடீரென எதிர்பாராத விதமாக மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அருகில் இருந்த ஏழு கடைகளுக்கு மளமளவென பரவி கடைகள் எரிந்து நாசமாகியுள்ளது.
இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறையினரின் முயற்சியால் தீ கட்டுக்குள் வந்துள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் அந்நேரத்தில் யாரும் கடைகளில் இல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் நாளை வெளியாகிறது. இத்திரைப்படத்தின் சிறப்பு…
டெல்லி : நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் பொதுவாக நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறுகிறது, அதேசமயம் ஜூலை மாதத்தில் தொடங்குவது…
புதுக்கோட்டை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து…
பெங்களுர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் 2025 கோப்பையை வென்று வரலாற்று சாதனை…
கேரளா : மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி இடம்பெற்றுள்ளது.…
அகமதாபாத் : எப்போது இந்த கனவு நிறைவேறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை…