அவசரச் சட்டத்திற்கு ஆதரவு… அரவிந்த் கெஜ்ரிவால் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு.!

Published by
Muthu Kumar

டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்தார்.

டெல்லியில் கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோரி, இன்று ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். முன்னதாக இந்த அவசர சட்டத்திற்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோருவதற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

அவர் இதுவரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சந்தித்துள்ளார்.

இது குறித்து பேசிய கெஜ்ரிவால், பாராளுமன்றத்திற்கு செல்லும் இந்த அவசர சட்டம் குறித்த விவாகரத்தில், லோக் சபையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இருக்கிறது, ஆனால் ராஜ்யசபையில் 238 உறுப்பினர்களில் 93 உறுப்பினர்களை மட்டுமே பாஜக வைத்திருக்கிறது, இதனால் எதிர்க்கட்சிகள் நாம் ஒன்றிணைந்தால் அவசர சட்டத்தை தோற்கடிக்க முடியும்.

இது டெல்லிக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொருந்தும், இதற்கு எதிராக அனைவரும் களமிறங்க வேண்டும். எங்களுக்கு அனைத்து தரப்பினரிடமும் நல்ல ஒத்துழைப்பு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார். மேலும் இந்த அவசரச் சட்டத்திற்கு ஆதரவாக ஹேமந்த் சோரன் உறுதியளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

காங்கிரஸின் நிலைப்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கெஜ்ரிவால், ஜனநாயகம், அரசியலமைப்பு, 140 கோடி மக்களுடன் காங்கிரஸ் துணை நிற்கப்போகிறதா அல்லது மோடியுடன் துணை இருக்கப் போகிறதா என்பதை காங்கிரஸ் தான் தீர்மானிக்கவேண்டும் என்று கூறினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

21 seconds ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

17 minutes ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

1 hour ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

2 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

3 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

3 hours ago