Categories: இந்தியா

நீட் முறைகேடு.! தவறு செய்தவர்கள் கண்டறியாவிட்டால்..? உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

Published by
மணிகண்டன்

டெல்லி: நீட் முறைகேடுகள் குறித்து சிபிஐ, மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற விசாரணையில், நீதிபதி சந்திரசூட் அமர்வு பல்வேறு கருத்துக்களை கூறினர். அதில், கடந்த முறை நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது விசாரணையில் தெளிவாகிறது. இதில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு அவர்கள் கண்டறிப்படாவிட்டால் நீட் மறுதேர்வு பற்றி ஆலோசிக்க வேண்டி வரும். கண்டுபிடித்துவிட்டால் அவர்களுக்கு மட்டும் நீட் மறுதேர்வு நடத்தப்படும்.

இந்த நீட் தேர்வு முறைகேட்டில் முக்கிய 3 அம்சங்களை, அதாவது எவ்வாறு முறைகேடு நடைபெற்றது என்பது பற்றி தேசிய தேர்வு முகமை ஓர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதே போல, நீட் முறைகேடு தொடர்பாக இதுவரை என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பது பற்றி விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். நீட் முறைகேடுகளை தடுக்க அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பற்றி மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கை தொடர்ந்த மாணவர்கள் குழுவினரும் தங்கள் தரப்பு கோரிக்கைகள் குறித்து 10 பக்கங்களுக்கு மிகாமல் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…

1 minute ago

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

32 minutes ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

1 hour ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…

2 hours ago

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…

3 hours ago