வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

Published by
லீனா

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் வன்னியர்களுக்கு (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ) 10.5% தனி இட ஒதுக்கீடு சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியின் போது வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு அளித்து அரசாணை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த இடஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்குமாறு சந்தீப் மற்றும் முத்துக்குமார் என்பவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இது நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து நீதிபதி கூறுகையில், உள்ஒதுக்கீடு சட்டத்தை நாங்கள் படித்து பார்த்ததாகவும் அதற்க்கு தடைவிதிக்க போவதில்லை என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும், ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம்  மதுரையை சேர்ந்த அபிஷ் குமார் என்பவர் தாக்கல் செய்த நிலுவையில் உள்ள இடஒதுக்கீடு வழக்குகளுடன் சேர்த்து வன்னியர் இடஒதுக்கீடு வழக்கும் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“போரில் நாங்களும் இணைந்துவிட்டோம்”…எமன் ராணுவம் அறிவிப்பு!

“போரில் நாங்களும் இணைந்துவிட்டோம்”…எமன் ராணுவம் அறிவிப்பு!

சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…

36 minutes ago

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி தாக்குதல் எப்படி? டிரம்பிடம் எழுந்த கேள்வி!

வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…

1 hour ago

INDvsENG : இங்க பவுலிங்கில் நான் தான் கிங்! புதிய சாதனை படைத்த பும்ரா!

லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…

2 hours ago

ரூ 11-க்கு 10ஜிபி டேட்டா! அசத்தல் திட்டத்தை கொண்டு வந்த ஜியோ & ஏர்டெல்!

மும்பை :  இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…

2 hours ago

போரில் இறங்கிய அமெரிக்கா! “பெரும் அழிவு காத்திருக்கு”…ஈரான் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…

2 hours ago

போரில் இறங்கிய அமெரிக்கா “ஈரான் மீது தாக்குதல்”! மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…

3 hours ago