#BREAKING : நிர்பயா வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி -உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Published by
Venu
  • நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்ஷ்குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்  செய்தார்.
  • நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்‌ஷய் குமாரின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

கடந்த 2012-ம் ஆண்டு  டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில்  6 பேர் கொண்ட  ஒரு கும்பம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில்  ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.பேருந்து ஓட்டுநர் ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் (பேருந்து உதவியாளர்) ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 6 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால் அவர்களில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு 3 ஆண்டுகள் கழித்து சீர்திருத்தப்பள்ளியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அந்த  5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.பின்னர் இந்த வழக்கில் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இந்த தண்டனை எதிர்த்து நான்கு பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.ஆனால் அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.எனவே நான்குபேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றனர்.இந்த வழக்கில் நால்வருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

இந்த வழக்கில்  தொடர்புடைய குற்றவாளி அக்‌ஷய் குமார்சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அக்‌ஷய் குமார்சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது விசாரணை டிசம்பர் 17- ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதனை தொடர்ந்து நேற்று  விசாரிப்பதாக இருந்தது.இந்த வழக்கில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகினார்.

இந்நிலையில் இன்று இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அக்‌ஷய்  குமார் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.அவரது வாதத்தில்,இந்த வழக்கில் அக்‌ஷய் குமார் சிங் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்று வாதிட்டார்.இறுதியாக நீதிபதிகள் , அக்‌ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை  தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.மேலும் அக்‌ஷய் குமார் சிங்கிற்கு வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்தனர்.

 

Recent Posts

நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா.!! 18 வருட கனவு.., முதல் முறையாக கோப்பை வென்றது RCB அணி.!

நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா.!! 18 வருட கனவு.., முதல் முறையாக கோப்பை வென்றது RCB அணி.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரின் இன்றைய தினம் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே…

2 hours ago

யார் கனவு நனவாகும்? 191 ரன் அடிச்சா கப் உங்களுக்கு.., சவாலான இலக்கு வைத்த ஆர்சிபி.!

அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப்…

4 hours ago

”விருதுகள், மானியங்களை விரைந்து வழங்கிடுக”- முதல்வர் ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம்.!

சென்னை : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படங்களுக்கான மானியங்கள் கடந்த 2016 முதல் 2022 வரை நிலுவையில் உள்ளது.…

5 hours ago

”ஜூன்-5ல் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட வேண்டும்” – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…

5 hours ago

ஆர்சிபிக்கு முதல் அடி: தூக்கி அடித்த சால்ட்.., அலேக்காக கேட்ச் புடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

6 hours ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…

6 hours ago