Categories: இந்தியா

காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் தமிழகம் பக்கமா.? கர்நாடகா பக்கமா.? வாட்டாள் நாகராஜ் பரபரப்பு கேள்வி.!

Published by
மணிகண்டன்

காவேரியில் இருந்து தமிழகத்திற்கான தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காவேரி விவகாரம் தொடர்பாக, காவேரி ஒழுங்கற்று மையம், காவேரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம் என தொடர்ந்து தமிழக அரசு போராடி வருகிறது.

ஆனால், கர்நாடக அரசு காவிரியில் எங்கள் மாநிலத்திற்கே தேவையான அளவு தண்ணீர் இல்லை அதனால், நாங்கள் தண்ணீர் தரமுடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளது. உச்சநீதிமன்றம் , காவிரி ஒழுங்காற்று மையம் கூறிய அளவீட்டின்படி உரிய அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், காவேரில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கோரிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாளை கர்நாடக மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்த  1500க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் நாளை கர்நாடக தலைநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகா அரசியல் கட்சி ஒன்றின் தலைவரான வாட்டாள் நாகராஜ் நேற்று பொதுக்கூட்டத்தில் பேசுகையில்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் ஒன்று கூறுகிறேன், பெங்களூருவில் ஏராளாமான தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு குடிக்க தண்ணீர் வேண்டாமா? வேண்டாம் என்றால் அவர்களை தமிழகத்திற்கு கூட்டி செல்லுங்கள். அவர்கள் மீண்டும் தமிழகம் பக்கம் வரக்கூடாது.

அதே போல, ரஜினிகாந்த், யார் பக்கம் இருக்கிறார் என்பதை தெளிவாக கூற வேண்டும். அவர் கர்நாடகா பக்கமா.? அல்லது தமிழ்நாடு பக்கமா.? என்பதை தெரிவிக்க வேண்டும் அது வரையில் அவர் கர்நாடகா பக்கம் வர கூடாது. அவர் படங்கள் இங்கு திரையிடப்படக்கூடாது.  இது ஒரு எச்சரிக்கை. அவர் விளையாட்டாக இருந்து விட கூடாது. அவர் கர்நாடகாவில் பிறந்து காவிரி நீரைக் குடித்து வளர்ந்ததால் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என்றும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

4 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

5 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

6 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

6 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

7 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

8 hours ago