இந்த ஆண்டின் முதல் டாடா நிறுவனத்தின் கார்கள்… புதனன்று புதிதாக இறங்கபோகும் புத்தம்புது மாடல்கள்….

Published by
Kaliraj
  • இந்த வருடத்தில் முதல் வரத்தாக களம்  இறங்க காத்திருக்கும் டாடா கார்.
  • புதிய பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்து கார்கள் களம் காணப்பொகின்றன.
    முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாம டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜனவரி 22-ம் தேதி அதாவது புதன் கிழமை இந்த ஆண்டிற்கான முதல் கார் வெளியீட்டு  நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் புதிய டாடா அல்ட்ரோஸ் காருடன் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்சான், டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் போன்ற கார்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்று கார்களுக்கான முன்பதிவுகள் சில தினங்களுக்கு முன் துவங்கிய நிலையில், இதன் முன்பதிவு கட்டணம் ரூ. 11,000 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
மூன்று ஃபேஸ்லிஃப்ட் கார்களும் டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் 2.0 வடிவில் உருவாக்கப்படுகின்றன. டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் நெக்சான் இ.வி. மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் வடிவமைப்பு டாடாவின் அல்ட்ரோஸ் மாடலை தழுவி உருவாகி இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த  காரில் குரோம் லைன் கிரில் மற்றும் உயர்த்தப்பட்ட பொனெட் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கலாம். இந்த  இரண்டு மாடல்களிலும் ஸ்போர்ட் ரீடிசைன் செய்யப்பட்ட ஹெட்லைட்கள், புதிய கிரில், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் வழங்கப்படலாம். இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் விலை தற்போது  விற்பனையாகும் பி.எஸ்.4 மாடல்களின்  விலையை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என டாடா நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. எனினும்,இந்த புதிய  வாகனங்களின் விலை விவரங்கள் பற்றி எவ்வித தகவலையும் டாடா நிறுவனம் வழங்கவில்லை.
டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் சந்தை விலை ஓரளவு அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல் வெர்ஷன் சந்தை விலை ரூ. 60,000 துவங்கி ரூ. 90,000 வரையிலும், நெக்சான் டீசல் வேரியண்ட் விலையில் ரூ. 1.4 லட்சம் வரை அதிகமக இருக்கும்  என கூறப்படுகிறது.
Published by
Kaliraj

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

22 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

52 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago