தெலுங்கானாவில் மாஸ்க் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானாவில் மாஸ்க் அணியாதவர்களிடம் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தெலுங்கானா தெலுங்கானா முதல்மந்திரி சந்திர சேகர ராவ் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வைரஸின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்க்காக அனைவரும் முக கவசங்கள் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தெலுங்கானாவில் கொரோனவால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று ஒரே நாளில் 140 க்கும் அதிமானோர் புதிதாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுவரை அங்கு 34 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், தெலுங்கானா முதல்மந்திரி சந்திர சேகரராவ் இது குறித்து பேசியபோது, வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், அவ்வாறு அணியாமல் வெளியில் வருபவர்களிடம் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், மக்கள் அனாவசியமாக சாலைகளில் சுற்றி திரிந்தால் முழு ஊரடங்கை அமல்படுத்த நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார். 

Published by
Rebekal

Recent Posts

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

59 minutes ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

1 hour ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

1 hour ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

1 hour ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

3 hours ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

3 hours ago