தெலுங்கானாவில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு

Published by
Edison

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் மே 22 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது வேகமாகப் பரவி வரும் நிலையில்,தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது 4 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து,தெலுங்கானா மாநிலத்திலும் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில்,தெலுங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.அந்தக் கூட்டத்தில்,கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு 10 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி,நாளை (அதாவது மே 12, புதன்கிழமை) முதல் மே 22 வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.இருப்பினும்,தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு மட்டும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Published by
Edison

Recent Posts

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

59 minutes ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

1 hour ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

1 hour ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

1 hour ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

3 hours ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

3 hours ago