ஓமைக்ரான் வைரஸை தொடர்ந்து, டெல்மைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.
முதலில் சீனாவின் யுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸானது, தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக டெல்டா வகை வைரஸ் தீவிரமாக பரவி பரவ தொடங்கியது. இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், ஓமைக்ரான் வைரஸை தொடர்ந்து, டெல்மைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அனைத்தும் மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில கொரோனா சிறப்பு குழுவை சேர்ந்த மருத்துவர் ஷசாங் ஜோஷி டெல்மைக்ரான் வகை கொரோனா வைரஸ் குறித்து கூறுகையில், ‘டெல்மைக்ரான் என்பது டெல்டா மற்றும் ஓமைக்ரான் அமைப்புகளின் கூட்டு சேர்க்கையாகும். இதன் காரணமாக தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா சுனாமி ஏற்பட்டுள்ளது.
டெல்மைக்ரான் வகை வைரஸானது, ஓமைக்ரான் வைரஸை காட்டிலும் அதிதீவிரமாக பரவக்கூடியது என்றும், ஆனால் குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டெல்டா மற்றும் ஓமைக்ரானின் கூட்டு சேர்க்கையான டெல்மைக்ரான் இரண்டு வைரஸ்களின் அமைப்பையும் ஒருங்கே பெற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…