Congress Bharat Jodo Nyay Yatra [file image]
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி முன்னெடுத்த இந்திய ஒற்றுமை நடைபயணம் யாத்திரை வெற்றியை தொடர்ந்து, தற்போது இரண்டாவது கட்டமாக பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
அசாமில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று காலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் கவுகாத்தி நகருக்குள் நுழைய விடாமல் ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மிசோரமில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 6 பேர் காயம்!
அசாமில் யாத்திரை மேற்கொண்ட ராகுலுக்கு அம்மாநில முதல்வர் மூலம் கடுமையான இடையூறுகள் கொடுக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நிலையில், தற்போது கவுகாத்தி நகருக்குள் நுழைய விடாமல் ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கவுகாத்தி எல்லையான கானாபுராவில் அசாம் மாநில போலீஸ் நூற்றுக்கணக்கானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேதாஜியின் 127வது பிறந்தநாள் : நடைப்பயணத்தில் ராகுல்காந்தி மரியாதை.!
இந்த சூழலில் ஆயிரக்கணக்கானோர் தொண்டர்களுடன், ராகுல் காந்தியை குவாஹாத்தி எல்லைக்குள் நுழைய விடாமல் அசாம் போலீஸ் தடுப்பதால், தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தியின் பயணத்தை போலீஸ் தடுத்ததால், இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடி நடத்தப்பட்டுள்ளது. அதுவும், ராகுல் காந்தி கண் முன்னே காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதையடுத்து ராகுல் காந்தி கூறியதாவது, கவுகாத்தியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து தான் பேசக்கூடாது என்பதற்காக தடுக்கப்படுவதாகவும், அமைச்சர் அமித்ஷா உத்தரவின்பேரில் அசாம் முதல்வர் தமது யாத்திரையை தடுப்பதாகவும் குற்றசாட்டியுள்ளார். இதனிடையே, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரிகைக்கு அசாம் மாநில காவல்துறை தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…