Categories: இந்தியா

மும்பையில் பயங்கர தீ விபத்து..7 பேர் பலி, 48 பேர் காயம்.! அரசு நிதியுதவி அறிவிப்பு.!

Published by
செந்தில்குமார்

மும்பையின் கோரேகானில் உள்ள கட்டிடத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆசாத் மைதானம் அருகே உள்ள எம்ஜி சாலையில் உள்ள ஜெய் பவானி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்த முயற்சி எடுத்ததோடு, தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் சிக்கியவர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் காயமடைந்த 46 பேரில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசாரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். நடந்தது துரதிஷ்டவசமானது. இறந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு அரசு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கும். காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்படும்.” என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மேலும், “மும்பையில் உள்ள கோரேகானில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழந்ததை அறிந்து வேதனை அடைந்தேன். நாங்கள் மும்பை போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

4 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

5 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

5 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

6 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

7 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

8 hours ago