பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.
கடந்த மாதம் 13-ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.ஆகவே கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் ,மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கொரோனா வழிக்காட்டுதல்களை பின்பற்றி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் நட்டா.மேலும் தனது உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் கடந்த சில நாட்களில் என்னை சந்தித்தவர்கள் ,தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.இது தொடர்பாக நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ,கொரோனாவின் போது பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் இப்போது கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளோம். இந்த சவாலான காலங்களில் அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்த எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா மற்றும் அவரது குழுவினருக்கு நாங்கள் முழு மனதுடன் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…