ராகுல்காந்தி மேல்முறையீடு மனு.! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.!

Published by
மணிகண்டன்

அவதூறு வழக்கு குறித்த ராகுல்காந்தி தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கர்நாடகவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்கையில் மோடி பெயர் குறித்து சர்ச்சைகுரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி அவர் மீது குஜராத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. குஜராத் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தி தனது எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து இருந்தார். அங்கும் ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்கவும் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனால் , தனது 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ராகுல்காந்தி கோரிக்கை வைத்து இருந்தார். இந்நிலையில் இன்று ராகுல்காந்தி மேல்முறையீட்டு வழக்கானது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

11 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

12 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

12 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

13 hours ago