பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி ,ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி 99 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி 130 இடங்களில் முன்னிலையில் உள்ளது.பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) முன்னிலை நிலவரம் :
ராஷ்ட்ரிய ஜனதாதளம் – 60
காங்கிரஸ் – 20
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)-13
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி -3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 3
தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance ) முன்னிலை நிலவரம் :
ஐக்கிய ஜனதாதளம்- 53
பாஜக – 70
விகாஷில் இன்சான் (Vikassheel Insaan Party)- 6
ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (Hindustani Awam Morcha) -1
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…