Thane , Maharastra [file image]
மஹாராஷ்டிரா: சமீபத்தில் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள தானே மாவட்டத்தில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு தவறுதலாக விருத்தசேதனம் செய்யப்பட்டதாக அச்சிறுவனின் பெற்றோர் கடந்த வியாழக்கிழமை புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த சிறுவனின் தாயார் பேசுகையில், “ஷாஹாபூரில் உள்ள ஒரு குடிமைப் பள்ளியில் எனது மகன் நான்காம் வகுப்பு படித்து வருகிறான். இந்த ஆண்டின் மே மாதத்தின் கடைசி வாரத்தில், என் மகன் பள்ளிக்குச் சென்று காலில் காயத்துடன் திரும்பி வந்தான்.
என் மகனிடம் விசாரித்த போது அவனும் அவனது வகுப்பு தோழர்களும் விளையாடும் பொழுது இடது காலில் தவறுதலாக கல் பட்டு காயம் ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனால் என் மகனை துணை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
அங்கு என் மகனுக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதன்பின் வீடு வந்த பிறகு காயம் ஏற்பட்ட இடத்திலிருந்து சீழ் வெளியேற தொடங்கியது. எனவே, மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் அங்கு அவரை சிகிச்சை செய்த மருத்துவர் காயம் ஆழமாக பட்டுள்ளதால் இதற்கு அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தனர்.
இதனால், கடந்த ஜூன் 15-ம் தேதி, சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தோம் பின் ஜூன் 17-ம் தேதி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன் பிறகு அறிவித்த நாளில் என் மகனுக்கு அறுவைசிகிச்சை நடந்து ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே கொண்டு வந்தார்கள்.
அப்போது தான் அவர்கள் காலில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை மாற்றி, விருத்தசேதனம் செய்ததை அறிந்தேன். இதை பற்றி மருத்துவர்களிடம் கேட்ட போது, அவர்கள் மீண்டும் உடனே என் மகனை உள்ளே அழைத்துச் சென்று சரியாக காலில் ஆபரேஷன் செய்தனர்.
இது குறித்து மருத்துவர்களிடம் மேற்கொண்டு கேட்ட போது, அவர்கள் அலட்சியமாக இதே வயதில் வேறு சிறுவர்கள் இருந்ததால் குழப்பம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள்.
மேலும், உங்கள் மகனுக்கும் ஆணுறுப்பில் தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்த விருத்தசேதனம் அறுவை சிகிச்சையால் நல்லதுதான் செய்திருக்கிறோம் என தவறையும் ஒப்புக்கொள்ளாமல் சமாளிக்கின்றனர்” என கூறினார்.
மேலும் இது தொடர்பாக காவல் துறைக்கு புகார் அளித்ததன் பெயரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், தானே சிவில் மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் கைலாஸ் பவார் மேற்பார்வையில் விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் மருத்துவத்துறையின் அலட்சியத்தை காட்டுவதோடு சற்று பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…