பாகிஸ்தான் பிரதமருக்கு இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசு…!

Published by
லீனா

இந்திய வான்வெளியை பயன்படுத்தி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அரசு முறை பயணமாக இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக இலங்கைக்கு முதன் முறையாக செல்ல உள்ளார். இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்தி செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்கள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரெஷி மற்றும் தொழிலதிபர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து உள்ளார். இவர்களது சந்திப்பின்போது வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்காத நிலையில், இம்ரான் கானுக்கு தற்போது இந்தியா அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

9 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

11 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

13 hours ago