AnuragThakur [Image source : thehindu]
பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனைகள் அல்லது மலிவு விலையில் வீடுகள் வழங்குவதற்கு குறிப்பிட்ட திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்விஎன் சோமு கேள்வி எழுப்பினார். அவர் அங்கீகாரம் பெறாத பத்திரிக்கையாளர்களை நலத்திட்டங்களில் சேர்க்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த அனுராக் தாக்கூர், பத்திரிகை தகவல் பணியகம் மற்றும் மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர்கள் மற்றும் அங்கீகாரம் பெறாத பத்திரிகையாளர்கள் இருவரும் பத்திரிக்கையாளர் நலத்திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் என்று கூறினார்.
இதன்பின், பத்திரிகையாளர்கள் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு நிதியுதவி செய்வது குறித்து கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, இறப்பு, ஊனம், சிகிச்சை ஆகியவற்றின் காரணமாக மிகவும் கஷ்டப்படும் பத்திரிகையாளர்கள் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்களின் கீழ் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று அனுராக் தாக்கூர் கூறினார்.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…