உஷார்..!அனைத்து மாநிலங்களும் ‘கருப்பு பூஞ்சையை’ ஒரு தொற்று நோயாக அறிவிக்க வேண்டும்- மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தல்…!

Published by
Edison

அனைத்து மாநிலங்களும் ‘கருப்பு பூஞ்சையை’ ஒரு தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,தற்போது கருப்பு பூஞ்சை என்ற புதிய தொற்றானது பரவி வருகிறது.அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக அளவில் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது,இதனால்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ‘மியூகோமிகோசிஸ்’ என்ற கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது.

இந்த ‘மியூகோமிகோசிஸ்’ என்ற கருப்பு பூஞ்சை தொற்றானது,கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் வைரஸிலிருந்து குணமடைந்த நீரிழிவு நோயாளிகளிடையே பரவி வருகிறது.குறிப்பாக தெலுங்கானா, ராஜஸ்தான்,டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் அதிக அளவில் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து,தற்போது கேரளா மற்றும் தமிழகத்தில் குறிப்பாக சென்னை,மதுரை போன்ற பகுதிகளில் கருப்பு பூஞ்சை தொற்றானது பரவி வருகிறது.மேலும்,தூத்துக்குடியில் 57 வயதுடைய முதியவர் ஒருவர் கருப்பு பூஞ்சை தொற்றினால் இன்று காலை உயிரிழந்துள்ளார். மேலும், டெல்லியிலும் 130 க்கும் மேற்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,இந்த தொற்று நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருவதால்,தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் அனைத்து மாநிலங்களும், ‘மியூகோமைகோசிஸ்’ என்ற கருப்பு பூஞ்சை நோயை ஒரு தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வலியுறுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக,கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,ராஜஸ்தான் அரசு நேற்று இந்த நோயை ஒரு தொற்று நோயாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து,தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் தெலுங்கானாவிலும் கருப்பு பூஞ்சை நோயானது ஒரு தொற்று நோயாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சையிலிருந்து குணமாகும் வழிமுறை:

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கருப்பு பூஞ்சை தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உடலுக்கு மிகவும் ஆபத்தாகிவிடும்.

அதாவது,தினமும் பாரத் சீரம் நிறுவனத்தின்,லிபோசோமால் ஆம்போடெரிசின் பி அல்லது எல்எம்பி என்ற ரூ.3,500 மதிப்புள்ள மருந்தின் ஒரு டோஸினை போட்டுக்கொள்ள வேண்டும்.தொடர்ந்து எட்டு வாரங்கள் வரை இந்த பூஞ்சை எதிர்ப்பு நரம்பு ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும்.ஏனெனில்,நோய்க்கு எதிரான ஒரே மருந்து இதுவாகும்.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பானது கடந்த மார்ச் மாதம் பாரத் சீரம் நிறுவனத்தின் இந்த பூஞ்சை எதிர்ப்பு மருந்திற்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

2 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

2 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

3 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

3 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

4 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

6 hours ago