ஆம்புலன்ஸிற்கு காத்திருக்காமல் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்து சென்ற அவலம்.!

Published by
Ragi

கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை ஆம்புலன்ஸிற்கு காத்திருக்காமல் உறவினர் ஆட்டோவில் ஏற்றி சென்ற அவலம் சம்பவத்தால் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனையடுத்து அவரது உடலை உறவினர்கள் ஆட்டோவில் கொண்டு சென்றுள்ளனர். இந்த அவல சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் டாக்டர் என். ராவ் விளக்கமளித்து பேசியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவரின் உறவினர் மருத்துவ ஊழியர் என்றும், அவரது உடலை தரும்படி உறவினர் கேட்ட போது, ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியதாகவும், ஆனால் அந்த உறவினர் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் ஆட்டோவில் உயிரிழந்தவரின் உடலை ஏற்றி சென்றதாக தெரிவித்துள்ளார். இது குறித்த விசாரணை அவரிடம் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்

Recent Posts

கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!

கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!

சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…

7 minutes ago

போதைப்பொருள் விவகாரம் – ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை.!

சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…

26 minutes ago

”அண்ணா குறித்து விமர்சனம்.. பாஜகவிடம் அடகுவைக்கப்பட்ட அதிமுக” – சேகர்பாபு கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…

29 minutes ago

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

2 hours ago

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

3 hours ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

4 hours ago