Categories: இந்தியா

மீட்புக் குழுவினரின் அர்ப்பணிப்பு பெருமை அளிக்கிறது… புகழ்ந்த பிரதமர் மோடி.!

Published by
Muthu Kumar

விபத்து நடந்த இடத்தில் துரிதமாக செயல்பட்ட மீட்புப்பணியினரின் அர்ப்பணிப்பு பெருமை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள சம்பவம் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து நாட்டு மக்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்து நடந்த இடத்தில் நேற்று முதல் மீட்புப்பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.

மீட்புக்குழுவினரின் பணிகள் மற்றும் நாட்டிற்காக அவர்களின் அர்ப்பணிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டில், ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினரின் அர்ப்பணிப்பு பெருமை அளிப்பதாக இருக்கிறது.

இரயில்வே துறையினர், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்(NDRF), ஒடிசா பேரிடர் மீட்புக்குழுவினர்(ODRAF), உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பலர் இந்த சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அயராது உழைத்து மீட்புப் பணிகளை வலுப்படுத்திய ஒவ்வொரு நபரையும் நான் பாராட்டுகிறேன். தங்களின் அர்ப்பணிப்புக்கு பெருமை என அவர் பதிவிட்டுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

2 hours ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

3 hours ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

3 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

4 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

6 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

7 hours ago