Odisha CM [Image source : file image]
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய 1000க்கும் மேற்பட்டவர்களை உள்ளூர் மக்கள் காப்பாற்றியதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த மூன்று ரயில்கள் விபத்தில், 288 பயணிகள் உயிரிழந்த நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டில் உள்ள மக்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனை அடுத்து இந்த விபத்து மனித தவறினால் ஏற்பட்டது அல்ல என்றும் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக கூறி மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று இரண்டாவது நாளாக சிபிஐ சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரயில் மோதிய விபத்தில் சிக்கிய 1000ற்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளூர் மக்களால் காப்பாற்றப்பட்டதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உள்ளூர் மக்களின் முயற்சிகள் ஒடிசா மக்களின் இரக்கத்தையும் மனித நேயத்தையும் வெளிப்படுத்தியுள்ளன, மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு மற்றும் இரத்த தானத்திற்கான நீண்ட வரிசையில் நின்ற என் மக்களைப் பற்றி பெருமைப்படுகிறேன் என்று கூறினார்.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…