Categories: இந்தியா

உள்ளூர் மக்களின் முயற்சிகள் ஒடிசா மக்களின் இரக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது..! முதல்வர் நவீன் பட்நாயக்

Published by
செந்தில்குமார்

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய 1000க்கும் மேற்பட்டவர்களை உள்ளூர் மக்கள் காப்பாற்றியதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த மூன்று ரயில்கள் விபத்தில், 288 பயணிகள் உயிரிழந்த நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டில் உள்ள மக்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனை அடுத்து இந்த விபத்து மனித தவறினால் ஏற்பட்டது அல்ல என்றும் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக கூறி மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று இரண்டாவது நாளாக சிபிஐ சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ரயில் மோதிய விபத்தில் சிக்கிய 1000ற்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளூர் மக்களால் காப்பாற்றப்பட்டதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உள்ளூர் மக்களின் முயற்சிகள் ஒடிசா மக்களின் இரக்கத்தையும் மனித நேயத்தையும் வெளிப்படுத்தியுள்ளன, மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு மற்றும் இரத்த தானத்திற்கான நீண்ட வரிசையில் நின்ற என் மக்களைப் பற்றி பெருமைப்படுகிறேன் என்று கூறினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

39 minutes ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

1 hour ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

2 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

2 hours ago

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

3 hours ago

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…

4 hours ago