விபத்தில் மகன் உயிரிழந்த பின் இளம் வயதில் விதவையான தனது மருமகளுக்கு சீதனத்தை அள்ளி கொடுத்து மறுமணம் செய்து வைத்து நெகிழவைக்கும் மாமனார்.
இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் பல இடங்களில் மாமியார் மாமனாருக்கு வாழ்நாளை வேலை செய்தே கழிக்கின்றனர். ஆனால், ஆண்கள் தங்கள் மனைவியை இழந்துவிட்டால் உடனடியாக மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள், பெண்களுக்கு அந்த சுதந்திரம் இன்று வரையிலும் பல இடங்களில் கிடைக்கவில்லை என்று தான் சொல்லியாக வேண்டும். ஆனால், மத்யப்ரதேசத்தில் மாமனார் ஒருவர் தனது மருமகளுக்கு செய்து வைத்துள்ள மறுமணம் பலரையும் நெகிழ வைக்கிறது.
ஆம், மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்துவரக்கூடிய ரவிசங்கர் என்பவரது மகன் சஞ்சய் சரிதா எனும் பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் ரவியின் மகன் ஒரு விபத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது மருமகள் இளம் வயதில் விதவையாக்கப்பட்டுவிட்டாலே எனும் வருத்தத்தில் இருந்த சரிதாவின் மாமனார், அப்பெண்ணின் குடும்பத்தார் சம்மதத்துடன் மணமகன் தேட ஆரம்பித்துள்ளார்.
அப்பொழுது ஏற்கனவே தனது மனைவியை இழந்து மருமணத்திற்காக காத்திருந்த ராஜேஷ் சோனி என்பாரை கண்டறிந்து, அவர் சம்மதம் தெரிவிக்கவே அனைவர் சம்மதத்துடனும் திருமணத்தை ரவி நடத்தி வைத்துள்ளார். ஆனால், சாதாரணமாக இல்லை கார், கழுத்து நிறைய நகைகள் மற்றும் ரொக்க பணம் என அள்ளிக்கொடுத்து தனது மருமகளுக்கு கவுரவமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் ரவி. மாமனாரின் இந்த நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…