மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததற்கு பொது மக்கள்தான் காரணம் என அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் நிலையில் கொரோனாவின் பாதிப்பு அதிகம் இருந்த நேரத்தில் இந்தியாவிலேயே அதிக பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா தான் இருந்தது. அதன் பின் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்குகள் விதிக்கப்பட்டதை அடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர சுகாதாரத்துறை அதிகாரிகள், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு பொது மக்கள் தான் காரணம் என கூறியுள்ளனர். மேலும், மகாராஷ்டிரா கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறும்போது தொற்று அதிகரித்துள்ள காலத்தில் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை படி நடந்து கொள்ளவில்லை எனவும், பொதுமக்களின் ஒழுக்கமற்ற தன்மையும் அலட்சியமும் தான் தொற்று அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…