மகளை பள்ளியில் சேர்க்க வந்த பெண்ணை மசாஜ் செய்ய பயன்படுத்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.
ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் லோகேஷப்பா. இந்நிலையில், பெண் ஒருவர் தனது மகளுக்கு சேர்க்கை கேட்டு பள்ளியில் லோகேஷப்பாவை அணுகி உள்ளார். அப்போது, அந்தப் பெண் ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிந்ததை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லோகேஷப்பா, அவருக்கு மசாஜ் செய்யும்படி அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்தப் பெண் அவருக்கு மசாஜ் செய்ய ஒப்புக்கொண்டார். பின்னர், லோகேஷப்பா அனைத்து ஆசிரியர்களையும் வெளியே அனுப்பி, ஒரு வகுப்பறையில் தனது சட்டையை அகற்றிய பின் மசாஜ் செய்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து, இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்ற நிலையில், தலைமையாசிரியர் லோகேசப்பாவை, பள்ளி நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து, பிபிஎம்பி சிறப்பு ஆணையர் (கல்வி) சங்கர் பாபு ரெட்டி கூறுகையில், லோகேஷப்பா மசாஜ் செய்ததை ஒப்புக் கொண்டார். கர்நாடக சிவில் சர்வீசஸ் விதிமுறைகளின்படி அரசு வேலை நேரத்தில் பிபிஎம்பியின் கோதண்டராமாபுரா மேல்நிலைப்பள்ளியை தனியார் வேலைக்காகப் பயன்படுத்தியதற்காக அவர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…