ஏவுகணை சோதனையின் போது ஏவுகணை கப்பல் ஒன்றை துல்லியமாக தாக்கி அழிக்கும் வீடியோவை இந்திய கடற்படை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்திய மற்றும் சீன எல்லையில் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.அவ்வபோது பாகிஸ்தானும் குடைச்சல் கொடுத்து வரும் சூழலில், இந்தியா தொடர்ந்து பல்வேறு ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அரபிக்கடலில் சமீபத்தில் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் அரபிக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, ஐ.என்.எஸ் பிரபால் என்ற போர் கப்பலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணை, நீண்ட தூரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும் காட்சி அதில், இடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது. ஆனால், தாக்கி அழித்த ஏவுகணை எந்த வகையான ஏவுகணை என்ற தகவலை இந்திய கடற்படை தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்க பதிவில், கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை அதன் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட பழைய கப்பல் ஒன்றை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது, என்ற தகவல் மட்டும் கூறப்பட்டு இருந்தது.
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…