KarnatakaCongress [File Image]
நிதி ஒதுக்கீடு தொடர்பாக 10 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை போலி எனக் கூறி கர்நாடக காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் போலியானது என காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. அந்த கடிதத்தில் நிதி ஒதுக்கீடு மற்றும் பல பிரச்சனைகள் தொடர்பாக எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அந்த கடிதத்தில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸின் 10 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் செவிசாய்க்கவில்லை என்றும், அவர்களின் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் விடுவிக்கப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய 10 எம்எல்ஏக்களில் ஒருவர், அந்தக் கடிதம் தனிப்பட்ட அறிக்கை என்றும், வியாழக்கிழமை நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி (சிஎல்பி) கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறினார். மேலும், எம்.எல்.ஏ.வான பி.ஆர்.பாட்டீலும், கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி, பாஜக தான் அதை உருவாக்கியதாக குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…