பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 30 ம் தேதி வரை தொடரும் என அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் மருத்துவ நிபுணர்கள் குழு ஊரடங்கை தொடர வேண்டும் எனவும் மால்கள் ,திரையரங்குகள் திறந்தால் கடும் விளைவுகளை சந்திக்கக்கூடும் என எச்சரித்தது .இந்நிலையில் ஊரடங்கை அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் மத்திய அரசு அறிவித்துள்ள 5ம் கட்ட ஊரடங்கின் வழிமுறைகள் அரசு பின்பற்றும் என தெரிவித்துள்ளார் .மத்திய அரசோ இந்த ஊரடங்கை சற்று வித்தியாசமாக அறிவித்துள்ளது .
நேற்று மத்திய அரசு 5ம் கட்ட ஊரடங்குக்கான அறிவிப்பை வெளியிட்டது.இந்த ஊரடங்கு சற்று வித்தியாசமாக UNLOCK 1.0 என்று ஊரடங்கு தளர்வாக அறிவித்துள்ளது .ஜூன் 1 முதல் 30 ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்றும் ஆனால் 3 கட்டங்களாக ஊரடங்கு தளர்வு இருக்கும் என்று அறிவித்துள்ளது .
பஞ்சாபில் நேற்று மட்டும் 39 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது .மேலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,197 ஐ எட்டியுள்ளது.1967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…