முதலிரவு அன்று மணமகனை கடைக்கு அனுப்பி விட்டு மாயமாகிய மணமகள்!

Published by
Rebekal

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமான அன்றே தனக்கு வயிற்றுவலி இருப்பதாக கூறி கணவனை கடைக்கு அனுப்பி விட்டு மணமகள் மாயம்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஆண்களுக்கு சிலர் மணப்பெண் பிடித்து தருவதாக கூறி விருப்பம் இல்லாத பெண்களை பணத்திற்காக பிடித்துக் கொடுத்து விட்டு பணத்தை வாங்கி விட்டு அவர்கள் சென்று விடுகிறார்கள். ஆனால் அந்தப் பெண்கள் அந்த திருமணத்தில் விருப்பமில்லாவிட்டால் உடனடியாக அந்த ஆணை விட்டு ஓடி விடுகிறார்கள். இறுதியில் பாதிக்கப்படுவது பணம் கொடுத்து ஏமாந்த ஆண்கள் தான். இதுபோன்ற சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் கோட்வாலி  என்னும் பகுதியில் உள்ள மனோஜ் என்பவர் 35 ஆயிரம் ரூபாய் கொடுத்து தனக்கு ஒரு மணமகள் வேண்டும் என ஒரு புரோக்கரிடம் கேட்டுள்ளார்.

அவரும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி விட்டு ஒரு பெண்ணை மனோஜுக்கு  காண்பித்துள்ளார். அந்த பெண்மணியும் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார். ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன் திருமணம் நடந்து இவர்கள் இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு நடைபெற்றுள்ளது. அன்று இரவே தனக்கு உடல்நிலை சரியில்லை வயிறு வலிக்கிறது என அந்தப் பெண்மணி கூறியுள்ளார். எனவே மனோஜ் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட சூடு என நினைத்து லேசாக வெளியில் நடந்து விட்டு வா என கூறி உள்ளார். இந்தப் பெண்மணியும் வெளியில் நடந்து விட்டு வந்து இன்னும் எனக்கு சரியாகவில்லை, கடைக்குச் சென்று மாத்திரை வாங்கி வா என கூறியுள்ளார்.

எனவே மருந்து வாங்குவதற்காக மனோஜ் கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்த பொழுது அவரது மனைவி வீட்டில் இல்லை. எங்கு சுற்றிப் பார்த்தாலும் அவரை காணவில்லை. தன்னை கடைக்கு அனுப்பி விட்டு அவரது மனைவி எங்கேயோ சென்று விட்டார் என்பது மனோஜுக்கு தெரிந்துவிட்டது. திருமண விருந்துக்கு வந்திருந்த அனைவரும் இது குறித்து பதறி வந்த நிலையில் மனோஜ் எனது மனைவி திரும்பி வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளாராம்.

Published by
Rebekal

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

6 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

6 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

7 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

7 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

8 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago