ஆட்டோ ஓட்டுனரை பழிவாங்க 22 கி.மீ தேடி சென்ற குரங்கு…!

Published by
Rebekal

குரங்கு ஒன்று தன்னை வனத்துறை அதிகாரிகளிடம் பிடித்து கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை பழிவாங்குவதற்க்காக 22 கி.மீ தேடி சென்றுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் எனும் பகுதியில் ஐந்து வயதான ஆண் குரங்கு ஒன்று மக்களிடமிருந்து பழங்கள் மற்றும் தின்பண்டங்களை பறிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் அந்த குரங்கின் சேட்டை அதிகரித்ததால் அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் குரங்கை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், குரங்கை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறியுள்ளனர். எனவே, அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஜெகதீசன் என்பவர் வனத்துறையினருக்கு உதவி செய்துள்ளனர். அப்பொழுது ஆட்டோ ஓட்டுனர் ஜெகதீசன் மீது பாய்ந்து அவரை அந்த குரங்கு கையில் கடித்து வைத்துள்ளது. இதனால் ஜெகதீசன் அங்கிருந்து பயத்தில் விலகியுள்ளார்.

இருப்பினும் அவரை விடாமல் குரங்கு துரத்தி சென்று உள்ளது. ஆனால் பல மணி நேர போராட்டத்துக்குப் பின்பதாக வனத்துறையினர் அந்த குரங்கை பிடித்து கிராமத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாளுர் எனும் பகுதியில் விட்டுள்ளனர். குரங்கின் தொல்லை ஒழிந்துவிட்டது என அனைவரும் நிம்மதி அடைந்த நிலையில், அந்த குரங்கு 22 கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஆட்டோ ஓட்டுனர் ஜெகதீசனை பழிவாங்குவதற்காக மீண்டும் அப்பகுதிக்கு தேடி வந்துள்ளது.

இதனையடுத்து பயத்தில் நடுங்கிய ஆட்டோ ஓட்டுநர் வனத்துறையினரிடம் மீண்டும் அது குறித்து புகார் அளித்துள்ளார். இதனை எடுத்து வனத்துறையினர் மீண்டும் அந்த குரங்கை பிடித்து தொலைவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர். ஒரு நபரை குறிவைத்து பழிவாங்குவதற்காக 22 கிலோமீட்டர் கடந்து குரங்கு வந்துள்ளது பலரையும் வியப்படையச் செய்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

6 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

6 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

7 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

7 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

9 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

10 hours ago