Categories: இந்தியா

பெற்ற மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்! உ.பி.யில் நடந்த அதிர்ச்சி!

Published by
பால முருகன்

உத்தரப்பிரதேசம் : பிஜ்னோரை சேர்ந்த மனநலம் சரியில்லாத பெண் ஒருவர் தனது 4 வயது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் சரியில்லாத ஆதேஷ் தேவி தனது குழந்தையை கொலை செய்த பிறகு வீட்டிற்குள் இருந்த அடுப்பில் உடலை எரிக்கவும் முயற்சி செய்து இருக்கிறார்.

தேவியின் கணவர் கபில் குமார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது மகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக உதவிக்கு குடும்ப உறுப்பினர்களை அழைத்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் வந்ததும், தேவி தனது கையில் மண்வெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் தனது கணவர் குமார் மற்றும் குடும்ப உறுப்பினர்களை வர விடாமல் விரட்டினார்.

இதனையடுத்து, குமார் உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்தார். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவி மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார் விசாரணை செய்த போது பல கேள்விகள் கேட்டும் தேவி அமைதியாக இருந்தார். அதன் பிறகு அவருடைய சகோதரர் தேவி “மனநிலை சரியில்லாதவர்” என்று காவல்துறைக்கு தகவலை தெரிவித்தார். இருப்பினும், விசாரணை இன்னும் நடந்து வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

8 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

9 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

10 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

10 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

11 hours ago