கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ள நிலையில் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என அவரது குடும்பத்தினர் சிறப்பு பூஜை மற்றும் யாமம் நடத்தி வருகின்றனர்.
மேலும் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் கர்நாடக அதிமுகவினரும் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.இந்நிலையில் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரும் , பாஜக எம்.பியுமான ஷோபா கரந்தலாஜே நேற்று முன்தினம் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி மலையில் உள்ள அம்மன் கோவிலில் வெறும் காலில் 1001 படிக்கட்டு ஏறி சிறப்பு வழிபாடு செய்தார்.
அப்போது அவருடன் இருந்த பாஜகவினர் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினார்.பின்னர் பேசிய ஷோபா கரந்தலாஜே ,குமாரசாமி பெரும் பான்மையை இழந்து விட்டதால் தார்மீக ரீதியில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என கூறினார்.
ஆளுநர் உத்தரவிட்ட பிறகும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் நாடகமாடி வருகிறார். அவரது சுயநல நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவே எடியூரப்பா முதல்வராக வேண்டும் என சாமுண்டீஸ்வரி மலையில் உள்ள அம்மனிடம் வேண்டிக் கொண்டேன் என கூறினார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…