[Image source : The Hidu ]
கழிவுகளைமுறையாக அகற்றாத பீகார் மாநிலத்திற்கு 4000 கோடி ரூபாய் அபராதத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயமான, NGTயானது பீகார் மாநில அரசுக்கு, திரவ மற்றும் திடக்கழிவுகளை அறிவியல் அபூர்வமாக அகற்ற தவறியதற்காக ரூ.4,000 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த அபராத தொகையினை கொண்டு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, “சட்டத்தின் உத்தரவை மீறி, திரவ மற்றும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்ற தவறியதற்காக, மாநில அரசுக்கு 4,000 கோடி ரூபாய் இழப்பீடு விதிக்கிறோம்.’ என உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி அபராத தொகையினை இரண்டு மாதங்களுக்குள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என நீதிமன்ற அமர்வு கூறியது.
இந்த தொகையை திடக்கழிவு பதப்படுத்தும் வசதிகள், மரபு கழிவுகளை சரிசெய்தல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STP) மற்றும் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையங்கள் (FSTP) அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…