RahulGandhi Camp [Image Source : PTI]
புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பழைய நாடாளுமன்றக் கட்டிடம் 1927ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு தற்போது 96 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த பழைய கட்டிடம் இன்றைய தேவைக்கு போதுமானதாக இல்லை என்ற காரணத்தால் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10 அன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் 64,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடம் அனைத்து பணிகளும் முடிந்து வரும் மே 28ம் தேதி திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க கூடாது எனவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…