Categories: இந்தியா

ரயில் விபத்துக்கு பிரதமரும் ரயில்வே அமைச்சரும் பதிலளிக்க வேண்டும்..! மல்லிகார்ஜுன் கார்கே

Published by
செந்தில்குமார்

ரயில் விபத்துக்கு பிரதமரும் ரயில்வே அமைச்சரும் பதிலளிக்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் நேற்று பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே மூன்று ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதில் காயமடைந்த பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ரயில்வே அமைச்சர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார்.

இந்நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, இந்த ரயில் விபத்து சம்பவம் குறித்து பிரதமரும் ரயில்வே அமைச்சரும் பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றையும் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்து காரணமாக தேசிய அளவில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில், முடிந்த மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முழு காங்கிரஸ் கட்சியினருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். பல்வேறு மாநிலங்களில் இருந்து பல காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவே வந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் கேட்க என்னிடம் பல கேள்விகள் உள்ளன. அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.

Kharge statement
Published by
செந்தில்குமார்

Recent Posts

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

7 minutes ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

1 hour ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

2 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

5 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

6 hours ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

6 hours ago