Anurag Thakur [Image source : ANI]
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரை கூட்டத்தில், சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதை பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது குறித்து கூறிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “சந்திரயான்-3 திட்டத்திற்காக பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளின் வரலாற்று வெற்றியை அமைச்சரவை பாராட்டுகிறது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி இஸ்ரோவின் வெற்றி மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் ஏற்றத்தின் சின்னம். ஆகஸ்ட் 23 ஆம் தேதியை ‘தேசிய அறிவியல் தினமாக’ கொண்டாடும் நடவடிக்கையை அமைச்சரவை வரவேற்கிறது. ” என்றார்.
மேலும், “சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்குவதில் நமது பெண் விஞ்ஞானிகள் பங்களிப்பை வழங்கியதற்காக அமைச்சரவை பெருமை கொள்கிறது. இது அடுத்த தலைமுறை பெண் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமளிக்கும். இந்திய விண்வெளி திட்டத்தை நோக்கிய பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கும் தலைமைத்துவத்துக்கும் அமைச்சரவை நன்றி தெரிவிக்கிறது” என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…