Categories: இந்தியா

அதானி குழும விவகாரம்.! செபிக்கு 3 மாத கால அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்.!

Published by
மணிகண்டன்

அதானி குழும விவகாரம் தொடர்பான விசாரணை நடத்த செபிக்கு 3 மாத காலம் அவகாசம் கொடுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலக பணக்காரர்களின் மிக முக்கியமானவராக உயர்ந்து வந்த இந்திய தொழிலதிபர் அதானி குறித்தும், பங்குசந்தை விவரம் குறித்தும் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் பங்குச்சந்தையை அதானி குழுமம் முறைகேடாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டியது.

இந்த ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து அதானி குழும பங்குகள் வெகுவாக சரிந்து உலக பணக்காரர் வரிசையில் இருந்து வெகுவாக சரிந்தார் அதானி. இதனை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. முதலில் தனியார் நிறுவன செயல்பாட்டில் தலையிட மறுத்த உச்சநீதிமன்றம், பின்னர் அதில் முதலீடு செய்து இருப்பது பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்து சாமானிய மக்கள் என்றும், பங்குச்சந்தை வீழ்ச்சி என்பது இந்திய பங்குச்சந்தையை பாதிக்கும் என்ற வாதங்களை ஏற்று விசாரணையை உச்சநீதிமன்றம் தொடர்ந்தது.

தற்போது , இந்திய பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபியானது அதானி குழுமம் தொடர்பாகவும், ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாகவும் விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

44 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

1 hour ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

4 hours ago